×

வேலைவாய்ப்பு முகாம்

அருப்புக்கோட்டை, செப். 10:அருப்புக்கோட்டை சௌடாம்பிகா பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.  கல்லூரி முதல்வர் சந்திரா தலைமை வகித்தார்.  இதில், சௌடாம்பிகா பொறியியல் கல்லூரி மற்றும் மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் மற்றும் தகவல் தொழிற்நுட்பத்துறை மாணவர்கள் சுமார் 300க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில், 74 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு ஆணை வழங்கப்பட்டது.  நிகழ்ச்சியில் சென்னை அப்பாசாமி அசோசியேட் நிறுவனத்தின் மனிதவள அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதற்கான  ஏற்பாடுகளை கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர் சுந்தரமகாலிங்கம் மற்றும் அனைத்து துறை தலைவர்கள் செய்திருந்தனர்.

Tags : Employment Camp ,
× RELATED மாவட்ட கலெக்டர் ஆபீசில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம்