×

மாவட்ட கலெக்டர் ஆபீசில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம்

திருப்பூர், மார்ச் 7: திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் இணைந்து திருப்பூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு முகாமை இன்று (7ம் தேதி) காலை 10.30 மணி முதல் 3 மணி வரை, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீர் கூட்ட அரங்கமான எண் 20-ல் நடத்துகிறது.

இந்த முகாமில் அனைத்து கல்வித்தகுதி உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பங்கேற்கலாம். முகாமில் கூடுதல் சிறப்பம்சங்களான தமிழ்நாடு திறன் மேம்பாடு மேம்பாட்டு கழக்த்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மகளிர் திட்ட அலுவலகத்தின் வேலைவாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சிக்கான பதிவு, மாவட்ட முன்னோடி வங்கியின் வங்கி கடன் குறித்த வழிகாட்டுதல் ஆகிய மேற்கொள்ளப்பட உள்ளன.

மேலும் 35-க்கும் மேற்பட்ட தனியார் தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று பணி நியமனம் வழங்க உள்ளனர் என்பதால் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பங்கேற்று வேலைவாய்ப்பை பெற்று, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 94999 33564, 0421-2971165 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post மாவட்ட கலெக்டர் ஆபீசில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,District Collector ,Christuraj ,District Administration ,District Disability Office ,Disability Employment Camp ,District Collector's Office ,Dinakaran ,
× RELATED திருப்பூரில் இருந்து தேர்தலில்...