×

இரண்டாம் சீசன் நெருங்கியது தேயிலை பூங்கா சீரமைப்பு பணி மும்முரம்

ஊட்டி, ஆக. 22: ஊட்டி அருேகயுள்ள தொட்டபெட்டா தேயிலை பூங்கா புல் மைதானங்கள் சீரமைக்கும் பணி மும்முரமாக நடக்கிறது.நீலகிரி மாவட்டத்திற்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இருப்பினும், முதல் மற்றும் இரண்டாம் சீசன் போது அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். முதல் சீசன் போது, தமிழகம் மற்றும் மற்ற மாநிலங்களில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

ஆனால், இரண்டாம் சீசன் போது வட மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதற்காக, முதல் சீசன் போன்றே இரண்டாம் சீசனிலும் அனைத்து பூங்காக்கையும் தோட்டக்கலைத்துறை தயார் செய்வது வழக்கம். இரண்டாம் சீசன் துவங்க இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் தற்போது அனைத்து பூங்காக்களும் தயார் செய்யும் பணியில் தோட்டக்கலைத்துறை மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. தொட்டபெட்டா பகுதியில் உள்ள தேயிலை பூங்காவும் தற்போது தயார் செய்யும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. பூங்காவில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்ட நிலையில், தற்போது பூங்காவில் உள்ள புல் மைதானங்கள் சீரமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

Tags :
× RELATED நாளை மலர் கண்காட்சி...