×

ராகவேந்திரா கல்லூரி மாணவர் தேசிய யோகா போட்டிக்கு தேர்வு

குமாரபாளையம், ஆக.20: குமாரபாளையம் ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர், தேசிய யோகா போட்டிக்கு தேர்வாகியுள்ளார். மதுரையில் போதி மகா கல்கி யோகா போட்டி நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1,500 மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர். குமாரபாளையம் ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியின் மெக்கானிக்கல் துறை மாணவர் ரஞ்சித் போட்டியில் பங்கேற்று இரண்டாமிடம் பெற்று, தேசிய போட்டிக்கு தேர்வானார். தேசிய யோகா போட்டிக்கு தேர்வான மாணவர் ரஞ்சித்துக்கு, கல்லூரியின் முதல்வர் விஜயகுமார் பரிசு வழங்கி பாராட்டினார்.

Tags :
× RELATED மாநில அளவிலான கைப்பந்து போட்டி