×

வாலிபர் மாயம்

தர்மபுரி, ஆக.20: பாப்பாரப்பட்டி பொம்மரசன்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் ஜெயக்குமார் (19). இவர், 7ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் உள்ளார். இதனால் பழனி, மகனை வேலைக்கு செல்லுமாறு கூறிவந்தார். இதுதொடர்பாக கடந்த 6ம் தேதி பழனிக்கும், ஜெயக்குமாருக்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து வீட்டை விட்டு வெளியே சென்ற ஜெயக்குமார், மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு  இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து பழனி, பாப்பாரப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா