×

நாட்டுத்துப்பாக்கி பதுக்கிய விவசாயி கைது

பாப்பிரெட்டிப்பட்டி, ஆக.20: பாப்பிரெட்டிப்பட்டி அருகே விவசாயி ஒருவர் வீட்டில் நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக, பள்ளிப்பட்டி வனசரகர் தமிழரசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அவர், செங்காட்டுபுதூரை சேர்ந்த வெங்கடாசலம்(42) என்பவரது விவசாய தோட்டத்தில் ஆய்வு செய்தனர். அப்போது வீட்டில் நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து, வெங்கடாசலத்தை ஏ.பள்ளிப்பட்டி ேபாலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். பின்னர், வெங்கடாசலத்தை போலீசார் கைது செய்தனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா