×

ஆணவ படுகொலைகளை கண்டித்து விசி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மதுைர, ஜூலை 23: தமிழகத்தில் தொடரும் சாதிய ஆணவ படுகொலைகளை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், மதுரை அண்ணாநகரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.நிர்வாகி செல்வ அரசு தலைமை வகித்தார். நிர்வாகிகள் கதிரவன், இன்குலாப் முன்னிலை வகித்தனர். சாதிய ஆணவ படுகொலையை தடுத்து நிறுத்த தனிச்சட்டம் இயற்ற வேண்டும். சாதிய ஆணவ படுகொலையை செய்கின்ற கூலிப்படை கும்பலை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். டபேதார் சந்தை நிருபன் சக்கரவர்த்தி படுகொலையில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில் நிர்வாகிகள் உஞ்சை அரசன், ஆற்றலரசு, கனியமுதன், எல்லாளன், பாண்டியம்மாள் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED மதுரையில் தொடர் சோதனை ஸ்மோக் பிஸ்கெட்...