×

சிங்களாந்தபுரம் ஏரியை தூர்வாரும் பணி

சேந்தமங்கலம், ஜூலை 23: பேளுக்குறிச்சி அடித்த சிங்களாந்தபுரம் ஏரியில் தூர்வாரும் பணியை மாவட்ட எஸ்.பி.அருளரசு தொங்கி வைத்தார்.பேளுக்குறிச்சி அடித்துள்ள சிங்களாந்தபுரத்தில், சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் ஏரி அமைந்துள்ளது. மழைக்காலங்களில் கொல்லிமலையில் இருந்து வரும் மழைநீர், ஓடைகளின் வழியாக இந்த ஏரிக்கு வரும். தற்போது, மழையின்றி ஏரி  முழுவதுமாக வறண்டு, கருவேலமரங்கள் முளைத்து காட்சியளிக்கிறது. இந்நிலையில், நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் இணைந்து சிங்களாந்தபுரம் ஏரியை தூர்வாரும் பணியை மேற்கொண்டனர். இதில் மாவட்ட எஸ்.பி. அருளரசு கலந்து கொண்டு, தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தொண்டு நிறுவன நிர்வாகிகள் சண்முகசுந்தரம், சரவணன், வேணுகோபால், சத்தியமூர்த்தி, நேரு யுவகேந்திரா, ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED மாநில அளவிலான கைப்பந்து போட்டி