×

காவேரிபுரத்தில் பழுதான மின்கம்பத்தை சீரமைக்க வலியுறுத்தல்

கடத்தூர், ஜூலை 23:  கடத்தூர் அருகே காவேரிபுரத்தில் பழுதடைந்த நிலையில் இருக்கும் மின்கம்பத்தை சீரமைக்க ேவண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.கடத்தூர் அருகே காவேரிபுரம் பகுதியில், 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மின்விநியோகம் செய்வதற்கு வசதியாக கான்கிரீட் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. 10ஆண்டுகளுக்கு மேலாவதால், தற்போது மின்கம்பத்தின் கான்கிரீட் பூச்சு உதிர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இந்த மின்கம்பத்திற்கு அருகில், அங்கன்வாடி மையம் மற்றும் தொடக்கப்பள்ளிகள் செயல்பட்டு வருவதால், மின்கம்பம் உடைந்து விழுந்தால் அசம்பாவிதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, பழுதடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதியதாக அமைக்க, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா