×

நீரில் மூழ்கி 2பேர் சாவு

தர்மபுரி, ஜூலை 23: தர்மபுரி மாவட்டம் அரூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மீன்சுந்தரம். இவரது மகன் காளிமுத்து (18), பிளஸ் 2 முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் காளிமுத்து நண்பர்களுடன் அரூர் அருகே உள்ள வள்ளிமதுரை அணையில் குளிப்பதற்காக சென்றார். அப்போது காளிமுத்து ஆழமான பகுதிக்கு சென்று குளித்த போது, நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள், அரூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடம் வந்த போலீசார் காளிமுத்துவை சடலமாக மீட்டனர். இதே போல், கிருஷ்ணகிரி மாவட்டம் தளி எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி(38). இவர் நேற்று முன்தினம் உறவினர்களுடன் ஒகேனக்கல் வந்தார். அங்குள்ள முதலைப்பண்ணை அருகே அனைவரும் குளித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக நீரின் மூழ்கி பெரியசாமி உயிரிழந்தார். இது குறித்து ஒகேனக்கல் ேபாலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா