×

ஓசூரில் ஏஐடியூசி ஆர்ப்பாட்டம்

ஓசூர், ஜூலை 18:  ஓசூர் ராம்நகர் அண்ணா சிலை அருகில் ஏஐடியூசி சார்பில், மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ₹2 வீதம் கூடுதல் வரி, பொதுத்துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு தனியாருக்கு விற்பது, விண்வெளி, எரிப்பொருள், நிதி, போக்குவரத்து உள்ளிட்டவைகளை கார்ப்பரேட் கம்பெனியிடம் ஒப்படைப்பது உள்ளிட்டவைகளை கண்டித்து கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய மாநில துணை தலைவர் லகுமய்யா தலைமை வகித்தார். ஏஐடியூசி மாவட்ட செயலாளர் மாதையன் வரவேற்றார். மாவட்ட துணை தலைவர் சங்கரைய்யா, துணை செயலாளர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்டிட சங்க மாவட்ட தலைவர் நஞ்சப்பா, மாவட்ட துணை செயலாளர்கள் சின்னசாமி, சீனிவாசன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் பழனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED மறியலில் ஈடுபட்ட 35 பேர் மீது வழக்கு