×

செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் பொதுத்தேர்வில் வெற்றி ெபற்ற மாணவர்களுக்கு பரிசு

தர்மபுரி, ஜூலை 16: தர்மபுரி மாவட்ட செங்குந்த மகாஜன சங்கம் சார்பில், அரூரில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற செங்குந்த சமுதாயத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஊக்க பரிசளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு, தர்மபுரி மாவட்ட செங்குந்த மகாஜன சங்க தலைவர் எம்கேஎஸ் உத்தண்டி தலைமை வகித்தார். சங்க பொதுச்செயலாளர் சச்சிதானந்தம், பொருளாளர் திருநாவுக்கரசு, அரூர் நகர தலைவர் ராஜேந்திரன், செயலாளர் மணிவண்ணன், பொருளாளர் குமரேசன், மூத்த நிர்வாகி ஆசைத்தம்பி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். விழாவில், தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்க தலைவர் செல்வராஜ், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கப்பரிசு வழங்கி ேபசினார். தொடர்ந்து, 10வது மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தங்க நாணயங்களும், 75 சதவீத மதிப்பெண்களை பெற்ற மாணவர்கள் 300பேருக்கு கல்வி ஊக்கத் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா