×

ஆஞ்சநேயர், நரசிம்மர் கோயில் உண்டியல் திறப்பு ₹17.98 லட்சம் காணிக்கை வசூல்

நாமக்கல், ஜூன் 27: நாமக்கல் ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்மர் கோயிலின் உண்டியல்கள் நேற்று திறந்து எண்ணப்பட்டது. இதில் ₹17.98 லட்சம் ரொக்கம், 37 கிராம் தங்கம், 140 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்மர் சுவாமி கோயிலில் உள்ள  உண்டியல்கள், 3 மாதத்துக்கு ஒரு முறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதன்படி நேற்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷ் முன்னிலையில், ஆஞ்சநேயர் கோயில் மற்றும் நரசிம்மர் கோயில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது.  

காணிக்கைகளை எண்ணும் பணியில் கோயில் அலுவலர்கள், ஊழியர்கள், பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர். இதில் ஆஞ்சநேயர் கோயில் உண்டியல்களில்  ₹8.98 லட்சமும், நரசிம்மர் சுவாமி கோயில் உண்டியல்களில்  ₹9 லட்சம் என மொத்தம் ₹17.98 லட்சம் ரொக்கமும், 37 கிராம் தங்கம், 140 கிராம் வெள்ளி ஆகியவையும் இருந்தது.


Tags :
× RELATED மாநில அளவிலான கைப்பந்து போட்டி