×

காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்மச்சாவு

குமாரபாளையம், ஜூன்27: குமாரபாளையத்தில், காதல் திருமணம் செய்த 6 மாதத்தில் இளம்பெண் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய சம்பவம் குறித்து சப்கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியை சேர்ந்தவர் ஹேமலதா(22). இவர் குமாரபாளையம் -ஆனங்கூர் பிரிவு சாலையிலுள்ள  தனியார் பல் மருத்துவமனையில் வேலை செய்து வந்தார். குமாரபாளையத்தைச் சேர்ந்த கார்மென்ட்ஸ் தொழிலாளி ரவிக்குமார் என்பவரை காதலித்த ஹேமலதா, 6 மாதங்களுக்கு முன்பு ெபற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். பின்னர், இருதரப்பு பெற்றோரும் இவர்களின் திருமணத்தை ஏற்றுக்கொண்டதால், குமாரபாளையம் அம்பேத்கர் தெருவில் புதுமணத் தம்பதிகள் குடித்தனம் நடத்தி வந்தனர். கடந்த சில மாதங்களாக கணவன், மனைவி இடையே  அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து, ஹேமலதாவின் அண்ணனிடம்,  ரவிக்குமார் அடிக்கடி முறையிட்டு வேதனைப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை, குமாரபாளையம் வந்த ஹேமலதாவின் அண்ணன், தங்கையிடம் பேசி அறிவுரை கூறியுள்ளார். அதன் பின்னர், வழக்கம் போல வேலைக்கு சென்ற ஹேமலதா மாலையில் வீடு திரும்பினார். சிறிது நேரம் கழித்து, வேலை முடிந்து ரவிக்குமார் வீட்டிற்கு வந்த போது, வீட்டில் ஹேமலதா தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.  இதுகுறித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த குமாரபாளையம் போலீசார், ஹேமலதாவின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  திருமணமாகி 6 மாதத்தில் ஹேமலதா இறந்ததால், இது தொடர்பாக சப்கலெக்டர் விசாரணை மேற்கொண்டுள்ளார்.


Tags :
× RELATED மாநில அளவிலான கைப்பந்து போட்டி