×

பெருமாகவுண்டம்பாளையத்தில் சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும்

நாமகிரிப்பேட்டை,  ஜூன் 27: நாமகிரிப்பேட்டை அடுத்த பெருமாகவுண்டம்பாளையத்தில்,  பராமரிப்பின்றி சிதிலமடைந்துள்ள சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நாமகிரிப்பேட்டை ஊராட்சி  ஒன்றியம், பெருமாகவுண்டம்பாளையத்தில் ஆயிரத்துக்கும்  மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில்,  கடந்த 2002-2003ம் ஆண்டு ₹2.25 லட்சம் மதிப்பில் பெண்கள் மற்றும்  குழந்தைகளுக்கான சுகாதார வளாகம் கட்டப்பட்டது.
கடந்த சில மாதங்களுக்கு முன், தண்ணீர் வசதி இல்லாததால் இந்த சுகாதார வளாகம் மூடப்பட்டது. மேலும், சுவர்களில் பல இடங்களில் விரிசல்  ஏற்பட்டு, வளாகத்தில் செடிகள் முளைத்து புதர்மண்டியுள்ளது. சுகாதார வளாகம் மூடியுள்ளதால் இப்பகுதி பெண்கள் மற்றும் குழந்தைகள், திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி  வருகின்றனர்.இது குறித்து, ஊராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும்,  எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, சுகாதார  வளாகத்தை புதுப்பித்து, மீண்டும் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED மாநில அளவிலான கைப்பந்து போட்டி