நாங்குநேரி, ஜூன் 26: நாங்குநேரி அடுத்துள்ள மறுகால்குறிச்சியைச் சேர்ந்தவர் அருணாசலம் மகன் ராமையா (24), லாரி டிரைவர். இவரது தம்பி நம்பிராஜனுக்கும், இதே பகுதியை சேர்ந்த தங்கபாண்டி மகன் செல்லச்சாமி (26), சுப்பையா மகன் உடையார் (37) ஆகியோருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் நம்பிராஜன் தாக்கப்பட்டார். இதுகுறித்து ராமையா, தனது தாய் சண்முகத்தாயுடன் நாங்குநேரி போலீசில் புகார் அளித்து விட்டு பைக்கில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். மறுகால்குறிச்சி தேவர் சிலை அருகே வரும்போது செல்லச்சாமி, உடையார் ஆகியோர் வழிமறித்து ராமையாவை தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த அவர், நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சம்பவம் குறித்த புகாரின் பேரில் நாங்குநேரி எஸ்ஐ செல்வநாராயணன் வழக்கு பதிந்து செல்லச்சாமி, உடையாரை தேடி வருகிறார்.