×

போலீசை கண்டித்து வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

மதுரை, ஜூன் 21: போலீசாரை கண்டித்து மதுரையில் வக்கீல்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல்லை சேர்ந்த வக்கீல் தியாகு போலீசாரால் தாக்கப்பட்டதை கண்டித்தும், போலீசார் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரியும் திண்டுக்கல்லில் வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மதுரை வழக்கறிஞர் சங்கத்தின் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் திண்டுக்கல் வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மதுரையிலும் வக்கீல்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. இதன்படி, மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள வக்கீல்கள் நேற்று பணிகளை புறக்கணித்தனர்.

பணிகளை புறக்கணித்த வக்கீல்கள் மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க தலைவர் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். இதில் செயலாளர் மோகன்குமார், பார் கவுன்சில் உறுப்பினர் அசோக், வக்கீல் ரமேஷ்  உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.



Tags : Lawyers ,
× RELATED திண்டிவனத்தில் தேனீக்கள் கொட்டியதில்...