ஒட்டன்சத்திரம், ஜூன் 21: ஒட்டன்சத்திரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பகல்நேர பாதுகாப்பு மையத்தில் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. தாய் மாற்றுத்திறனாளிகள் சார்பில் நடந்த இவ்விழாவிற்கு பாலமுருகன் தலைமை வகித்தார், லையன்ஸ் கிளப் தலைவர் முருகேசன், சிறப்பு ஆசிரியை செல்லாயி முன்னிலை வகித்தனர். பொருளாளர் தியாகராஜன் வரவேற்றார். விழாவில் ஸ்கூல் பேக் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.