×

2019ம் ஆண்டு விளையாட்டுத்துறையில் பத்ம விருது பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

தர்மபுரி, ஜூன் 21: 2019ம் ஆண்டு விளையாட்டுத்துறையில், பத்ம விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து தர்மபுரி கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள அறிக்கை: தேசத்திற்கு நற்பெயரையும், புகழையும் சர்வதேச அளவில் ஈட்டித்தந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று, இந்திய நாட்டின் 2வது உயரிய விருதான பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது, 2019ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பத்ம விருது பெற, குறிப்பிட்ட துறைகளில் முன்னதாக தேசிய விருதோ அல்லது மாநில விருதோ பெற்றிருத்தல் வேண்டும். சமுதாயத்தின் பலவீனமான பிரிவுகளில் உள்ள திறமையானவர்கள், இவ்விருதிற்கு விண்ணப்பிக்க தகுதியுடைவர்கள் ஆவர். மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தவிர, இதர அரசு பணியாளர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவன பணியாளர்கள் பத்ம விருதிற்கு விண்ணப்பிக்க தகுதியில்லை.

இவ்விருதுகள் தொடர்பான விவரங்கள் www.padmaawards.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, நாளைக்குள் (22ம் தேதி) மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், தர்மபுரி அனுப்பி வைக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பங்கள், கலெக்டர் பரிந்துரைகளுடன் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.  எனவே, தகுதியுள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா