×

பாலத்தின் தடுப்பு சுவரில் மொபட் மோதி பெண் பலி

கடையநல்லூர், ஜூன் 19:  புளியங்குடி மலையடிக்
குறிச்சியை சேர்ந்தவர் முத்தையா மனைவி முத்தாட்சி (40). இவரும், புளியங்குடி அண்ணா நகரை சேர்ந்த ராமகிருஷ்ணன் மனைவி பரமேஸ்வரி (36) என்பவரும் தோழிகள். கடந்த 16ம் தேதி இரவு கடையநல்லூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு இருவரும் மொபட்டில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். புன்னையாபுரத்தில் வரும்போது அங்குள்ள பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி பள்ளத்தில் இருவரும் விழுந்தனர். இதில் பைக்கை ஓட்டி வந்த முத்தாட்சி சம்பவ இடத்திலேயே பலியானார். பரமேஸ்வரி படுகாயங்களுடன் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சொக்கம்பட்டி எஸ்ஐ முத்துராஜா வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : bridge ,
× RELATED ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம்..!!