×

ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறிய விளாமுத்தூர் சாலை பொதுமக்கள் அவதி

பெரம்பலூர்,  மே25:  திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து விளாமுத்தூர் செல்லும் சாலை முக்கிய இணைப்பு சாலையாக விளங்கி வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் பல்வேறு பணிகளுக்காக பெரம்பலூர் நகருக்கு செல்வதற்கு இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் சென்று வரவும் இந்த சாலை வழியாக சென்று வருகின்றனர்.  பெரம்பலூர் நகருக்கு செல்லும் சாலை முக்கிய இணைப்பு சாலையாக விளங்கி வருகிறது.மேலும் இந்த சாலையில் நூற்றுக்கணக்கான ஏக்கர் கிணற்று பாசன விவசாய நிலங்களும், மானாவாரி விவசாய நிலங்களும் உள்ளன. இந்த விவசாய நிலங்களுக்கு விவசாயிகள் தங்கள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை ஓட்டிச் செல்கின்றனர். விவசாய நிலங்களுக்கு தேவையான அனைத்து இடுபொருள்களையும் எடுத்துக் செல்கின்றனர். விவசாய நிலங்களில் விளையும் தானியங்களையும் எடுத்து வர வேண்டும்.

மேலும் பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளிகளின் பஸ்கள் சென்று வருகின்றன.இதுபோல் பல்வேறு பயன்பாட்டுக்கும் மிகவும் முக்கியமான சாலையாக உள்ள இந்த சாலை மிகவும் குண்டும், குழியுமாக  போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில்  உள்ளது. இதனால் சைக்கிள்,  உள்ளிட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் வண்டிகள், செல்ல முடியாமல் மிகவும் அவதிப்படும் சூழ்நிலை உள்ளது. எனவே மிகவும் குண்டும் குழியுமாக உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இருந்து விளாமுத்தூர் செல்லும் இந்த  சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டிகள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி