நாமக்கல், மே 25: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிபெற்றார். இந்த வெற்றியை, நாமக்கல் மாவட்டத்தின் பல இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள்.
நாமக்கல் கிழக்கு மாவட்டம் மங்களபுரத்தில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் அர்ஜுன், மாவட்ட அமைப்பாளர் செல்வநிலவன் மற்றும் கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் மங்களபுரம் குட்டி ராஜ்குமார் மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.