×

லாரி மீது கார் மோதி தந்தை பலி; மகன் படுகாயம்

ஓசூர், மே 25:  கேரளா மாநிலம், ஆலப்புழா பூஜக்கல் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்(62). இவரது மகன் திரிஜித்(33). இவர் பெங்களூருவில் தனியார் கார் நிறுவனத்தில் ஆலோசகராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில், தந்தை மகன் இருவரும்,ஓசூரில் இருந்து பெங்களூரு நோக்கி  காரில் சென்று கொண்டிருந்தனர். ஓசூர் தர்கா அருகே சென்ற போது, முன்னால் சென்ற லாரி எந்த சிக்னலும் செய்யாமல் திடீரென்று வளைவில் திரும்பியது.

இதனால், நிலைதடுமாறிய கார் லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சதீஷ், திரிஜித் ஆகியோர் படுகாயம் அடைந்தார். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே சதீஷ் பரிதாபமாக இறந்தார். திரிஜித்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags :
× RELATED மறியலில் ஈடுபட்ட 35 பேர் மீது வழக்கு