×

வெற்றிக்கு பாடுபட்ட அனைவருக்கும் நன்றி

ஓசூர், மே 25: ஓசூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் சத்யா(திமுக), முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டியின் மனைவி ஜோதி பாலகிருஷ்ணரெட்டி (அதிமுக), புகழேந்தி (அமமுக), ஜெயபால் (மநீம), ராஜசேகர்(நாம் தமிழர் கட்சி) மற்றும் 4 சுயேட்சைகள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 2,27,306 வாக்குகள் பதிவானது. நேற்று முன்தினம் நடந்த வாக்கு எண்ணிக்கை முடிவில், சத்யா 1,15027, ஜோதி பாலகிருஷ்ணாரெட்டி 9,1814, புகழேந்தி 1,432, ஜெயபால் 8,032, ராஜசேகர் 6,740 வாக்குகள் பெற்றிருந்தனர். திமுக வேட்பாளர் சத்யா, அதிமுக வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டியை விட 23,213 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதுகுறித்து சத்யா எம்பி கூறுகையில், ``இந்த வெற்றிக்கு பாடுபட்ட மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ, மாவட்ட துணை செயலாளர் முருகன் எம்எல்ஏ மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நான் அளித்த வாக்குறுதிபடி, எனக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்த மக்களின் அனைத்து கோரிக்கைகளையும், தலைவர் மு.க.ஸ்டாலின் வழியில் நிறைவேற்ற பாடுபடுவேன்,’’ என்றார்.

Tags : all ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...