×

மின்னல் தாக்கி மாணவன் பலி

கூடலூர், மே 25: கூடலூர் அடுத்த நடுவட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட டீஆர்பஜாரில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. அப்போது இதே பகுதியை சேர்ந்த சந்திரன் கூலித் தொழிலாளி, இவரது மகன் ஆதர்ஷ்(15) வீட்டில் உள்ள கட்டிலில் தனியாக உறங்கிகொண்டு இருந்தான். அப்போது தலையில் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

இவர் இங்கு உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்துவந்தான். மேலும், இவர்கள் வீட்டில் உள்ள டிவி, மின் மீட்டர் ஆகியவையும் எரிந்து சேதமானது. தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுகுறித்து வருவாய்த்துறையினர், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : victim ,
× RELATED கார் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி: இருவர் காயம்