×

கஞ்சா விற்க முயன்ற 2 பேர் கைது

உசிலம்பட்டி, மே 25: உசிலம்பட்டி அருகே கஞ்சா விற்க முயன்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். உசிலம்பட்டி பஸ்நிலையம் பகுதியில் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். உசிலம்பட்டி அருகேயுள்ள கணவாய்பட்டியைச் சேர்ந்த செங்குட்டுவன் (27), இதே ஊரைச் சேர்ந்த சீனிவாசன்(17), மெய்யணம்பட்டியைச் சேர்ந்த விக்னேஷ் (17) ஆகிய மூன்று பேரும் டூவீலருடன் கஞ்சா விற்பனை செய்வதற்காக நின்று கொண்டிருந்தனர். அதைப்பார்த்த போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர். அதில் செங்குட்டுவன் தப்பி ஓடிவிட்டார். சீனிவாசன், விக்னேஷ், ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 6 கிலோ 500 கிராம் கஞ்சா மற்றும் டூவீலரை பறிமுதல் செய்து, உசிலம்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Tags :
× RELATED மதுரையில் தொடர் சோதனை ஸ்மோக் பிஸ்கெட்...