×

வேலைவாய்ப்பு சிறப்பு முகாம் நாளை நடக்கிறது

பெரம்பலூர், மே 23: பெரம்பலூரில் வேலைவாய்ப்பற்ற படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது. பெரம்பலூர் கலெக்டர் சாந்தா தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்புத்துறை அலுவலகத்தில் தனியார்துறை நிறுவனங்களும், தனியார்த்துறையில் பணிபுரிய விருப்பமுள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது.எனவே தனியார்துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளை கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவச பணியாகும்.

இதன்மூலம் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படாது.முகாமில் பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த ஆண், பெண்கள் பங்கேற்கலாம். எனவே இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் நாளை (24ம் தேதி) காலை 10 மணிக்கு பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்புத்துறை அலுவலகத்தில் நடைபெறவுள்ள தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Employment Special Camp ,
× RELATED மயிலாடும்பாறை கிராமத்தில் வேலைவாய்ப்பு சிறப்பு முகாம்