×

தொழிற் பிரிவுகளில் சேர விண்ணப்பிக்க அழைப்பு

தர்மபுரி, மே 23: தர்மபுரி அரசு தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  தர்மபுரி அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில், தொழிற் பிரிவுகளுக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கல்வி தகுதியாக 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் கம்பியாள் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் அண்டு புரோகிராமிங் அசிஸ்டண்ட்,  கட்டடபட வரைவாளர், மின்பணியாளர், பொருத்துநர், கம்மியர் மோட்டர் வண்டி, கம்மியர் டீசல் என்ஜின், கடைசலர், இயந்திர வேலையாள் மற்றும் பற்றவைப்பவர் ஆகிய தொழிற் பிரிவுகளுக்கு ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 14 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். பெண்களுக்கு குறைந்தபட்ச வயது 14, உச்ச வயது வரம்பு இல்லை. மேலும் தனியார் கல்லூரியில் சேரவும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் 31.05.2019க்குள் விண்ணப்பிக்க வேண்டும். கலந்தாய்வுக்கு வரும்போது விண்ணப்பித்த விண்ணப்பம், சலான் மற்றும் அசல் சான்றிதழ்கள் கொண்டுவர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா