×

ஆட்டோ கவிழ்ந்து 6 பேர் படுகாயம்

அரக்கோணம், மே 23: அரக்கோணத்தில் இருந்து நெமிலிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ நேற்று காலை ெசன்றது. காவேரிபுரத்தில் உள்ள ஒரு வளைவில் திரும்பியபோது எதிர்பாராமல் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் ஆட்டோவில் பயணம் செய்த விஜய், புனிதா, ஞானமணி, வினோதி, சுஜாதா உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் படுகாயமடைந்த 6 பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த நெமிலி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : auto collapse ,
× RELATED கட்டுமானப் பணி முடிந்து காத்துக்...