×

குடும்பத் தகராறில் விபரீதம் தண்ணீர் தொட்டி மீது ஏறி தொழிலாளி தற்கொலை முயற்சி

தர்மபுரி, மே 22: தர்மபுரி அருகே, குடும்பத் தகராறில், கூலி தொழிலாளி குடிநீர் தொட்டி மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தர்மபுரி அருகே சிவாடி பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன்(27) கூலி தொழிலாளியான இவரது மனைவி சினேகா(23). இந்த தம்பதிக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவிக்கிடையே குடும்பத்தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், நேற்றிரவு 8 மணியளவில் தனது மனைவியிடம் குமரேசன், பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். ஆனால், அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த குமரேசன், ஊருக்கு அருகே உள்ள தண்ணீர் தொட்டியின் மீது ஏறினார். பின்னர், கீழே குதித்து தற்கொலை செய்வதாக மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்த தகவலின்பேரில், தொப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீர் தொட்டி மீது ஏறிய கூலி தொழிலாளி குமரேசனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால், சமாதானமடைந்த குமரேசனை போலீசார் கீழே இறக்கினர். பின்னர், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா