×

கோவிலூர், நார்த்தம்பட்டி ஏரிக்கரை சாலையை அகலப்படுத்த வேண்டும்

தர்மபுரி,  மே 21: தர்மபுரி அருகே கோவிலூர், நார்த்தம்பட்டி ஏரிக்கரை சாலையை அகலப்படுத்தி மின்விளக்கு அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். நல்லம்பள்ளி நார்த்தம்பட்டி சின்னசாமி மகன் அதியமான், பொதுமக்கள் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நல்லம்பள்ளி ஒன்றியம் கோவிலூர், நார்த்தம்பட்டி கிராம ஏரிக்கரையோரத்தில் நல்லம்பள்ளி-லளிகம் சாலை செல்கிறது. இவ்வழியாக கோவிலூர், நார்த்தம்பட்டி, லளிகம், மிட்டாரெட்டிஅள்ளி, மிட்டாதின்னஅள்ளி, மாதேமங்கலம், பூதனஅள்ளி ஊராட்சி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை செல்லும் ஏரிக்கரையோரத்தில் மின்விளக்குகள் இல்லை. இதனால், இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லாமல், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, இந்த சாலையை அகலப்படுத்தி, தடுப்பு சுவர் மற்றும் மின்விளக்கு அமைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Kovilur ,lakes ,Narthampatti ,
× RELATED சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!