×

ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி

நெல்லை, மே 19:  விஎம் சத்திரத்தை சேர்ந்தவர் ரங்ககுமார் (50). ஆட்டோ டிரைவரான இவர் நேற்று இரவு 10 மணிக்கு ஆட்டோவில் பயணிகளை பாளை சாந்திநகரில் இறக்கிவிட்ட பிறகு பாளை கக்கன்நகர் நான்கு வழிச்சாலை வழியாக வீட்டிற்கு  திரும்பிக்கொண்டிருந்தார். இதில் ஆட்டோ திடீரென சாலையில் கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த அவரை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

Tags :
× RELATED குண்டாசில் இருவர் கைது