×

பிடமனேரி துளசி நகரில் பழுதடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

தர்மபுரி, மே 17:  தர்மபுரி அருகே பிடமனேரி துளசி நகர் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி டவுன் ஒட்டிய பகுதி பிடமனேரிக்கு உட்பட்ட துளசி நகரில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள், தர்மபுரி டவுனுக்கு செல்லும் பிரதான சாலையில், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக இந்நிலை நீடிப்பதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘கடந்த 2 ஆண்டுக்கு முன்பு இப்பகுதியில் தார்சாலை அமைக்கப்பட்டது. சாலை அமைத்த சில மாதங்களிலேயே, கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, பழுதடைந்த சாலையை விரைவில் சீரமைக்க ேவண்டும்,’ என்றனர்.

Tags : city ,Bidamenari ,Tulsi ,
× RELATED சென்னை கண்ணகி நகரில் போலீசார் மீது கஞ்சா போதை ஆசாமிகள் தாக்குதல்