×

பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் தபால் வாக்குகள் குறித்து திமுக வேட்பாளர் மனு

தர்மபுரி, ஏப்.24: பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில், தபால் வாக்குகள் குறித்த தெளிவான விளக்கம் கேட்டு திமுக வேட்பாளர் வக்கீல் ஆ.மணி மனு அளித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வக்கீல் ஆ.மணி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் தபால் வாக்குகள் முறையே பதிவு செய்யப்பட்டுள்ளது. தபால் வாக்குகள் செலுத்தாத அரசு ஊழியர்களுக்கு அவரவர் இடம் தபால் வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் ஏற்கனவே தபால் வாக்குகள் அளித்தவர்களுக்கும் மீண்டும் அளித்துள்ளதாக அறிகிறேன். எனவே தபால் வாக்குகள் குறித்த தெளிவான விளக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.


Tags : candidate ,DMK ,constituency ,Peppertipatti Assembly ,
× RELATED செலவு செய்ய பணமில்ல… பூரி காங்கிரஸ் வேட்பாளர் தேர்தலில் இருந்து விலகல்