×

ஓய்வு பெற்ற தலை மையாசிரியருக்கு பிரிவுபசார விழா

தர்மபுரி, ஏப்.24: தர்மபுரி அரசு அதியமான் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முனுசாமி ஓய்வு பெற்றார். இதையடுத்து அவருக்கு பிரிவுபசார விழா நேற்று பள்ளியில் நடந்தது. விழாவுக்கு தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் கண்ணப்பன் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமசாமி, மாவட்ட கல்வி அலுவலர்கள் பாலசுப்பிரமணி, சண்முகவேல், மத்திய சுங்கம், கலால் மற்றும் சேவை வரிகள் தீர்ப்பாயத்தின் துணைத் தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தி பேசினர். பணி ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் முனுசாமி, 23 ஆண்டுகள் முதுநிலை கணித ஆசிரியராகவும், 5 ஆண்டுகள் தலைமையாசிரியராகவும் பணியாற்றினார். நிகழ்ச்சியை மாரண்டஅள்ளி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செந்தமிழ்ச்செல்வி, தமிழாசிரியை தாமரைச்செல்வி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். இதில் மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர்.

Tags : ceremony ,headmaster ,
× RELATED விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா