×

ஆலங்குடி அருகே காதலித்து ஏமாற்றிய இளைஞரை கைது செய்யக்கோரி சாலை மறியல் பெண் வீட்டார் திரண்டனர்

ஆலங்குடி, மார்ச் 22: ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் காதலித்து ஏமாற்றிய இளைஞரை கைது செய்யக் கோரி பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு ஊராட்சிக்குட்பட்ட பாப்பாமனையைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் மகள் துஷ்யந்தினி (24). டிப்ளோமோ நர்சிங் படித்துள்ளார். இவரும், வடகாடு மல்லிகைபுஞ்சையை சேர்ந்த செல்வம் மகன் ராஜேஷ் (30) (டிராவல்ஸ் வைத்துள்ளார்) என்பவரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ராஜேஷ், துஷ்யந்தினியை திருமணம் செய்து கொள்ளாமல் கடந்த 19ம் தேதி வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, துஷ்யந்தினி கேட்டபோது, ராஜேஷ் மற்றும் அவரது பெற்றோர் செல்வம் (60), பாப்பா (50) ஆகியோர் தகராறு செய்துள்ளனர். மேலும், ராஜேஷ் துஷ்யந்தினி பற்றிய அவதூறான வீடியோ பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவிடுவதாகவும் கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, துஷ்யந்தினி ஆலங்குடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் ராஜேஷின் பெற்றோர் செல்வம், பாப்பா ஆகியோரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ராஜேஷை கைது செய்ய வலியுறுத்தி வடகாடு அரசு மேல்நிலைப் பள்ளி அருகே துஷ்யந்தினியின் குடும்பத்தினர், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வடகாடு போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : house ,Alangudi ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்