×

புதுகையில் தேர்தல் துணை அலுவலர்களுக்கான பயிற்சி

புதுக்கோட்டை, மார்ச் 22: தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் வாக்குவாசடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கும் பொருட்டு முதல் கட்டமாக மண்டல அலுவலர்கள், மண்டல துணை அலுவலர்களுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை இயக்கும் முறை குறித்த பயிற்சி புதுக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு தாசில்தார் பரணி தலைமை வகித்தார்.  தனி தாசில்தார்கள் யோகேஸ்வரன், சோனை கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மண்டல அலுவலர்கள், துணை மண்டல அலுவலர்கள் பலர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

Tags : Electoral Officers ,
× RELATED மக்களவை தேர்தல் அன்று ஊதியத்துடன்...