×

விளக்குடியில் பயன்பாடின்றி கிடக்கும் பேருந்து நிறுத்தம்

திருத்துறைப்பூண்டி, மார்ச்21: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள விளக்குடி பழைய போஸ்ட் ஆபிஸ்பஸ்நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. காலப்போக்கில் இந்த பேருந்து நிறுத்தம் குடிமகன்களின் பாராக மாறி, பொதுமக்கள் பேருந்து நிறுத்தத்தில் நின்று பேருந்தில் ஏற முடியாதசூழ்நிலைஏற்பட்டது. இந்த பகுதியிலுள்ள சமூகஆர்வலர்கள் பேருந்து நிறுத்தஉள்பகுதியில் கருவைமுட்களை வைத்து அடைத்து விட்டனர்.இந்நிலையில் தற்போது கோடைகாலம் என்பதால் பொதுமக்கள் பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்து அவர்கள் போகவேண்டிய இடத்திற்கு செல்வதற்கு வசதியாக பேருந்து நிறுத்தத்தை சுத்தம் செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bus stop ,
× RELATED கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில்...