புதுச்சேரி, மார்ச் 19; புதுவை அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகர் வெளியிட்டுள்ள அறிக்கை:புதுவை தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலுவை, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக காங்கிரஸ் அரசும், கூட்டணி கட்சிகளும் சேர்ந்து உடனே விடுவிக்க வேண்டுமென தேர்தல் அணையத்திடம் புகார் அளித்துள்ளது பல்வேறு சந்தேகங்களை கிளப்பி உள்ளது.2016ம் ஆண்டு மிக நேர்மையாக தேர்தலை நடத்தி சிறந்த தலைமை தேர்தல் அதிகாரி என்ற விருதினை ஜனாதிபதியிடமிருந்து தேசிய வாக்காளர் தினத்தன்று பெற்றவர் கந்தவேலு. கந்தவேலு அப்பதவியில் தொடர வேண்டுமென அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தை கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார்.