×

மணல் கடத்தலை தடுத்தவருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

திருமங்கலம், பிப்.21: திருமங்கலம் அருகே மணல் கடத்தலை தடுத்தவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர். திருமங்கலம் அருகேயுள்ள சின்னபிள்ளையார் நத்தம் ஓடையில் சிலர் மணல் கடத்துவதாக ராயபாளையத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் கிருஷ்ணமூர்த்திக்கு தகவல் வந்தது. கிராம மக்களுடன் சென்று கிருஷ்ணமூர்த்தி ஓடையில் மணல் கடத்தியவர்களை தடுத்துள்ளார். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் ராயபாளையத்திற்கு சென்ற அம்சுபாண்டி(30), ராஜேஷ்(30) ஆகியோர் கிருஷ்ணமூர்த்திக்கு கொலை மிரட்டில் விடுத்ததாக கூறப்பட்டது. இதுகுறித்து இவர் கொடுத்த புகார் பேரில், திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்சுபாண்டியை கைது செய்தனர். தலைமறைவான ராஜேசை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED மதுரையில் தொடர் சோதனை ஸ்மோக் பிஸ்கெட்...