×

கலசப்பாக்கம் அருகே முன்விரோத தகராறில் விவசாயி, இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து வாலிபர் கைது

கலசபாக்கம், பிப்.21: கலசபாக்கம் அருகே முன்விரோத தகராறில் விவசாயி மற்றும் அவரது உறவினர் பெண்ணை சரமாரி கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கலசபாக்கம் அடுத்த எர்ணாமங்கலத்தை சேர்ந்தவர் ஏழுமலை(50), விவசாயி. ஈச்சம்பூண்டி பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர்(27), மரம் ஏறும் தொழிலாளி. இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இவர்கள் தனித்தனியாக சென்று கலசபாக்கம் அடுத்த பூவாம்பட்டு கிராமத்தில் உள்ள அரசு டாஸ்மாக்கில் மது அருந்தியுள்ளனர். அப்போது, போதையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் இருவரும் ஒருவரை ஒருவர் கையால் தாக்கி கொண்டனர்.

இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் இருவரையும் சமரசம் செய்தனர். இதையடுத்து, மாலை ராஜசேகர் மீண்டும் ஏழுமலையின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டார். அப்போது, ஆத்திரமடைந்த ராஜசேகர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஏழுமலையின் வயிற்றில் சரமாரியாக குத்தினாராம். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஏழுமலையின் உறவினர் சத்யா(35) என்பவர் தடுத்ததார். அப்போது, ராஜசேகர் சத்யாவையும் கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த இருவரையும் அவரது உறவினர்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இது குறித்த புகாரின் புகாரின்பேரில் கலசபாக்கம் போலீசார் ராஜசேகரை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : dispute ,polling place ,
× RELATED கொடுங்கையூர் டாஸ்மாக் கடையில் தகராறு...