×

பைக் விபத்தில் மாணவன் பலி

போளூர், பிப்.21: போளூர் பத்மபாய் தெருவை சேர்ந்தவர் மகேஷ், பால் வியாபாரி. இவரது மகன் சுரேந்தர்(17). திருவண்ணாமலையில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், போளூர் டவுன் பகுதியில் உள்ள கடைகளுக்கு பால் ஊற்ற சுரேந்தர் நேற்று காலை பைக்கில் சென்றார். அப்போது, போளூர்- வேலூர் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் எதிர்பாராதவிதமாக பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த சுரேந்தர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போளூர் சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : student ,bike accident ,
× RELATED சிவில் சர்வீஸ் தேர்வில் போட்டிகள்...