×

உட்கோட்டை-ஜெயங்கொண்டம் சாலை படுமோசம் திமுக ஊராட்சி சபை கூட்டத்தில் புகார்

ஜெயங்கொண்டம், பிப்.15: ஜெயங்கொண்டம் அருகே நடந்த திமுக ஊராட்சி சபை கூட்டத்தில் உட்கோட்டை-ஜெயங்கொண்டம் செல்லும் சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஜெயங்கொண்டம் அருகில் உள்ள ஆமணக்கந்தோண்டி, பெரியவளையம், கழுவந்தோண்டி, தேவாமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் திமுக ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநில இலக்கிய அணி துணை தலைவர் கவிதைபித்தன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று பேசினார்.
கூட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் முதியோர் உதவி தொகை நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு சிலருக்கு மட்டுமே வருகிறது. பெரியவளையம் கிராமத்தில்  பல இடங்களில் தண்ணீருக்காக நடந்து செல்ல வேண்டியுள்ளதால் பொது இடங்களில் சிறிய சின்டெக்ஸ் தொட்டி அமைக்க வேண்டும், நிறுத்தப்பட்டுள்ள பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் அனைத்து கிராமங்களிலும் மழைநீர் வடிகால் வசதி முழுவதும் செய்துதர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் மனுக்களில் கொடுத்தனர்.
கூட்டத்தில் மாவட்ட துணைசெயலாளர் கணேசன், ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர்கள் குமார், பிருதிவிராஜன், சங்கரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் இராமராஜன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி  ஒருங்கிணைப்பாளர் குலோத்துங்கன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஷாஜகான் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : meeting ,DMK Panchayat Council ,Kodungallam ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...