×

வயிற்று வலியால் அவதி பெண் தீக்குளித்து தற்கொலை

நீடாமங்கலம்,பிப்.14:  வயிற்றுவலியால் அவதியுற்ற பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா வடபாதிமங்கலம் போலீஸ் சரகம் அரிவலூர் கருப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன்தாஸ். இவரது மனைவி தீபா(29)கடந்த சில வாரங்களாக வயிற்று வலியால் அவதி பட்டு வந்ததாக கூறப்படுகிறது. .இந்நிலையில் மனமுடைந்த தீபா கடந்த 7ம் தேதி உடலில் தீ வைத்து கொண்டார். தீக்காயங்களுடன் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லு£ரி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.இவருக்கு .ஒரு ஆண்,ஒரு பெண் குழந்தைகள் உள்ளது.இது தொடர்பாக தீபாவின்  தாய் சாந்தி(55) வடபாதிமங்கலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில்  இன்ஸ்பெக்டர் பொறுப்பு சரவணன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags :
× RELATED திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் 22ம் தேதி திருவிழா துவக்கம்