×

2 வாலிபர்கள் மீது குண்டாஸ் பாய்ந்தது

மதுரை, ஜன.23: பல்ேவறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 2 வாலிபர்கள் குண்டாசில் கைது செய்யப்பட்டனர்.மதுரை பாக்கியநாதபுரத்தை சேர்ந்தவர் ராமர் மகன் விஜய்(22). இவர் மீது மதுரை மாநகரத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே மதுரை மாநகர கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவின் பேரில் விஜய்யை செல்லூர் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைந்தனர்.மதுரை ஏ.ஜி.சுப்புராமன் தெருவை சேர்ந்தவர் தமிழ்செல்வன் என்ற செந்தமிழ்செல்வம்(22). இவர் மீது மதுரை மாநகரத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே மதுரை மாநகர கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவின்பேரில் தமிழ்செல்வனை செல்லூர் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைந்தனர்.

Tags :
× RELATED மதுரையில் தொடர் சோதனை ஸ்மோக் பிஸ்கெட்...