×

ஜாக்டோ - ஜியோ வேலை நிறுத்த போராட்டம் காங்கயம் தாலுகாவில் 5 ஆயிரம் அரசு ஊழியர்கள் பங்கேற்பு

வெள்ளக்கோவில், ஜன. 22:  ஜாக்டோ - ஜியோ வேலை நிறுத்த போராட்டம் காங்கயம் தாலுகாவில் 5 ஆயிரம் அரசு ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர்.இதுகுறித்து தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் பிரபாகர் முத்தூரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஜாக்டோ-ஜியோ போராட்ட குழு மூலம் ஏற்கனவே பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

எனினும் இதுவரை ஆசிரியர்கள்-அரசு ஊழியா–்கள் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றவில்லை.  இதனால் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்  தொடங்கப்பட உள்ளது. மேலும் ஜாக்டோ- ஜியோ போராட்ட குழு சார்பில் இன்று காலை 10 மணிக்கு காங்கயம் தாலுகா அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதனை தொடா்ந்து ஜாக்டோ - ஜியோ சார்பில்  மறியல் உட்பட பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும்.

Tags : government employees ,Thakukawa Congress ,
× RELATED ஓய்வு அரசு ஊழியர் சங்க கூட்டம்