×

மனநலம் பாதிக்கப்பட்ட 4பேர் மீட்பு

கொடுமுடி,ஜன.22:   கொடுமுடியி-்ல் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் பல ஆண்டுகளாக சுற்றித்திரிந்தவர்களை போலீசார்  ஆசிரமத்துக்கு அனுப்பி வைத்தனர். ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் மூன்று ஆண்கள், ஒரு பெண் உட்பட நான்குபேர் கடந்த சில வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் கொடுமுடியில் உள்ள  கோயில் வீதிகள், காவிரி கரை , கடைத்தெரு ஆகிய இடங்களில் சுற்றி திரிந்து வந்தனர்.

நீண்ட நாட்களாக இவர்களை தேடி அவர்களது உறவினர்கள் யாரும் வராத நிலையில் சுற்றித்திரிந்துவந்தவர்களை கொடுமுடி போலீசார் ஆசிரமத்துக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர்.கொடுமுடி போலீசாரின் முயற்சிக்கு சென்னிமலையை சேர்ந்த சமூக ஆர்வலர் சொக்கலிங்கம் உதவ முன்வவந்தார். இதன்பேரில் நேற்று மாலை கொடுமுடியில் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்த நான்குபேரையும்  சொக்கலிங்கம் மூலம் விழுப்புரம் குண்டலப்புலியூரில் உள்ள அன்புஜோதி ஆதரவற்றோர் ஆசிரமத்துக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

Tags :
× RELATED திண்டல் முருகன் கோயிலில் ரூ.1.20 லட்சத்தில் தென்னை நார் விரிப்புகள்