×

பொங்கல் கொண்டாட்டம் முடிவு - பஸ் ஸ்டாண்டில் அலைமோதிய பயணிகள்

தர்மபுரி, ஜன.18: பொங்கல் விடுமுறை முடிந்து மாணவர்கள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் தங்கள் வேலை செய்யும், படிக்கும் இடத்திற்கு திரும்பினர். இதனால் தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, கடந்த 13ம் தேதி முதல் நேற்று(17ம் தேதி) வரை அரசு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து, 12ம் தேதி முதலே அனைத்து பணியாளர்களும், தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்று உற்றார், உறவினர்களுடன் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிலையில், பண்டிகையை கொண்டாட சென்ற அரசு ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் நேற்று முதல் சொந்த ஊர்களில் இருந்து பணிக்கு திரும்பினர். இதனால், தர்மபுரி புறநகர் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் அலை மோதியது.
சென்னை, பெங்களூர், சேலம் மார்க்கமாக செல்லும் பஸ்களில், பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. கூட்ட நெரிசலை தவிர்க்க 100க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனாலும், நேற்று கூட்ட நெரிசல்  இருந்தது. இதையடுத்து பாதுகாப்பு பணியை போலீசார் மேற்கொண்டனர்.

Tags : Voyager Passenger ,Bus Stand ,
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை