×

தகடூர் புத்தகப் பேரவை சார்பில் பொங்கல் விழா

தர்மபுரி, ஜன.18: தர்மபுரி மாவட்ட மைய நூலகம் அருகே, தகடூர் புத்தகப் பேரவை சார்பில் பொங்கல் விழா நடந்தது. விழாவில், மொரப்பூர் பாரதி குழுவினரின் கிராமிய கலைநிகழ்ச்சிகள், சோலைக்கொட்டாய் பள்ளி மாணவி பூவிழியின் பாடல், பம்பை இசை நிகழ்ச்சி, தர்மபுரி மாவட்ட கவிஞர்களின் கவிதை வாசிப்பு, திரைக் கலைஞர்களின் நகைச்சுவை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில், டிஎஸ்பி காந்தி, முன்னாள் எம்.பி. செந்தில், தகடூர் புத்தகப் பேரவை நிர்வாகிகள் சிசுபாலன், கண்ணன், ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் ராஜசேகரன், விஞ்ஞானி குந்தவை, எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

Tags : festival ,Tadapur Book Fair ,
× RELATED கோயில் திருவிழாவில் இரு...