வத்தலக்குண்டு, ஜன. 18: வத்தலக்குண்டுவில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அதிமுக ஒன்றிய செயலாளர் பாண்டியன் தலைமை வகிக்க, நகர செயலாளர் பீர்முகமது முன்னிலை வகித்தார். எம்ஜிஆர் படத்திற்கு மாலையணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் மோகன், நிர்வாகிகள் அன்னக்களஞ்சியம், கனிபாய், ரத்தினம், சுதாகர், செல்லப்பாண்டி, ராமமூர்த்தி, சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.